அஸ்ஸலாமு அலைக்கும் ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

வஃபாத் செய்திகள்

 லால்பேட்டை ஹைஸ்கூல் பின்புறம் மாமாகண்டு பசீருதீன் அவர்களின் தாயார்
லால்பேட்டை ஹைஸ்கூல் பின்புறம் மாமாகண்டு மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும் ( மாமாகண்டு   ஷிஹாபுதீன்  அக்கா ) பசீருதீன் அவர்களின் தாயார் சம்சுன்நிஷா அவர்கள் இன்று 04.12.2010 மாலை 5:30 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

ஷார்ஜாவில் காலமானார் சகோதரர் - உமர் சரீஃப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…….
தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர் சரீஃப் (வயது-29) அவர்கள் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
 (இவர் தமுமுகவின் பொதுச்செயலாலர் சகோ-ஹைதர் அலி அவர்களின் மருமகன் ஆவார் மற்றும் தமுமுக துபை மண்டலத்தின் நிர்வாகியுமாவார்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். சகோ.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்’ சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.
24-11-2010 அன்று ஷார்ஜாவில் காலமான சகோதரர் – உமர் சரீஃப் அவர்களின் உடல் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை 26-11-2010 காலை சரியாக 9மணியலவில் அன்னாரின் ஜனாஸா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.
இடம் :- மஸ்ஜிதுல் ஸஹாபா அல் காசிமியா மருத்துவமணை அருகில் ஷார்ஜா மேலும் விபரங்களுக்கு : நஜீர் – 050 1736892, ஹாரிஸ் – 055 4128182.  
தமுமுக துபை மண்டலம்
தொடர்பு எண்கள்: 00971 50 4474563 . 00917 55 291049


07-05-2010 அன்று சகோதரர். உமர் சரீஃப் இரத்ததானம் செய்யும் பொழுது எடுத்த படம்.
http://lalpetexpress.com 
லால்பேட்டை சிங்கரா வீதி P.K.B.பஷீர் அவர்கள்

லால்பேட்டை சிங்கரா வீதி P.K.B.பஷீர் அவர்கள் இன்று 13.11.2010 மாலை  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

தோப்புத்தெரு மசூத் அலி அவர்கள் மறைவு

ஆயங்குடி நடுப்பள்ளி தெரு மர்ஹூம் முஹம்மது ஹலீம் அவர்களின் சகலராகிய கொள்ளுமேடு காதர் அவர்களின் மகன் மசூத் அலி அவர்கள் 11.11.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இவர் தோப்புத்தெருவில் வசித்து வந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....